Headlines

கஃல்ப் நாடுகள் மீது ஈரான் சரமாரி ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்: முக்கிய எண்ணெய் வயல்கள், அமெரிக்கத் தளங்கள் இலக்கு

ஈரானியப் புரட்சிகரக் காவல்படையினர் இன்று அதிகாலை கஃல்ப் நாடுகள் மீது புதிய அலையாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனை வளைகுடா நாடுகள் இடைமறித்து முறியடித்து வருகின்றன.

ஐக்கிய அரபு அமீரகம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈரானில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதாகக் கூறியுள்ளது. அத்துடன், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு எச்சரித்துள்ளது.

கடந்த இரண்டு மணி நேரத்தில், சவுதி அரேபியா தனது கிழக்குப்பகுதிகளில் ட்ரோன்களை இடைமறித்துள்ளது. அத்துடன், இளவரசர் சுல்தான் விமானத் தளத்தை நோக்கி வந்த ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்துள்ளதாகக் கூறியுள்ளது. ஷேபா எண்ணெய் வயலை இலக்கு வைத்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஆயுதங்களையும் இடைமறித்துள்ளதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் முன்னர் தெரிவித்தது.

பஹ்ரைனில் இன்று காலை சைரன் ஒலிகள் ஒலித்தன. குடியிருப்பாளர்களை அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஈரானின் புரட்சிகரக் காவல்படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கத் தளங்கள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பல அடுக்கு மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *