கொழும்பு:
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நாளை (18) அமுல்படுத்தப்படவிருந்த ஒன்பது மணி நேர நீர் வெட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
முன்னதாக, அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அறிவிப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, குறித்த பகுதிகளில் உள்ள
பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
பாதிக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகள்:
- கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான அனைத்துப் பகுதிகளும்
- பத்தரமுல்ல
- பெலவத்த
- ஹோகந்தர
- கொஸ்வத்த
- தலவத்துகொட
- கோட்டே
- ராஜகிரிய
- மிரிஹான
- மடிவேல
- நுகேகொடை
- நாவல
- கொலன்னாவ
- IDH வைத்தியசாலைப் பகுதி
- கொட்டிகாவத்த
- அங்கொட
- வெல்லம்பிட்டிய
- ஒருகொடவத்த
- மகரகம
- பொரலஸ்கமுவ
- தெஹிவளை
- இரத்மலானை
- மொரட்டுவ