2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேகர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் சேர்த்து, மேலும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கும் வெளிநாட்டு பயணக் கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
அவர்களில் இராணுவ கேணல் மொஹமட் அன்சார் மற்றும் முன்னாள் புலனாய்வு அதிகாரியான பிரேமானந்த உடலகம (சில்வா) ஆகியோரும் அடங்குவர்.
அதே சமயம், இதே விசாரணை தொடர்பாக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
