Headlines

வரலாற்றுச் சாதனை: இந்தியாவின் மிக நீண்ட காலப் பிரதமரானார் நரேந்திர மோடி; ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பதவி வகிக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். அவர் புதன்கிழமையுடன் தனது பதவிக்காலத்தில் 4,399 நாட்களை (12 ஆண்டுகள்) நிறைவு செய்துள்ளார். இதன் மூலம், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வாழ்த்து இந்த வரலாற்றுச் சாதனைக்காக இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “இந்த மைல்கல் உங்கள் பதவிக்காலத்தை மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மக்கள் உங்கள் தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையும் காட்டுகிறது” என அவர் தனது வாழ்த்துச் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

12 ஆண்டுகால ஆட்சியின் முக்கிய மைல்கற்கள் கடந்த 12 ஆண்டுகளில், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பல அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது:

  • வறுமை ஒழிப்பு: சுமார் 250 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.
  • உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம்: வீதிப் போக்குவரத்து, விமான நிலையங்கள் (74 இலிருந்து 160 ஆக உயர்வு) மற்றும் ரயில்வே துறைகளில் அசுர வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதுடன், UPI போன்ற சேவைகள் மூலம் மாபெரும் டிஜிட்டல் புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.
  • தேசிய பாதுகாப்பு: தீவிரவாத ஒழிப்பு, காஷ்மீருக்கான 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகளில் பல பலமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த 12 ஆண்டுகால பயணம், நாட்டின் மீதான மக்களின் நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் பொது நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு பப்புவா நியூ கினியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களும் அவருக்குத் தமது வாழ்த்துகளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *