டெங்கு நோய் ஆபத்து அதிகரித்துள்ள நிலையில், அதிக ஆபத்துள்ள 6 மாகாணங்களில் இன்று (24) முதல் ஜூன் 26 வரை மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு தடுப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 48,000 கடந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் கலாநிதி கபில கன்னங்கர தெரிவித்தார்.
ஜனவரி முதல் இன்று வரை நாடு முழுவதும் மொத்தம் 48,287 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஜூன் 23 அன்று மட்டும் சுமார் 750 புதிய டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளில் 52.12 சதவீதத்தைக் கொண்ட மேற்கு மாகாணம், மிகவும் அதிக ஆபத்துள்ள மாகாணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் மொத்தம் 14,446 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
தென் மாகாணத்தில் 16.04 சதவீதமும், சபரகமுவ மாகாணத்தில் 9.15 சதவீதமும் டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு பரவலுடன் இணைந்து, நாட்டில் சிகுன்குனியா நோயும் அதிகரித்து வருவதாகவும் கலாநிதி கன்னங்கர எச்சரித்துள்ளார்.
எமது Facebook பக்கத்தைப் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்.
