கொழும்பு, ஜூலை 16, 2026: இலங்கையின் தேசிய இளைஞர் முன்னணி இன்று கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் “Read with Ranil” (ரணிலுடன் வாசிப்போம்) என்ற இளைஞர்களை மையப்படுத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது.
40 வயதுக்குட்பட்ட இளம் இலங்கையர்களை ஒன்றிணைத்த இந்நிகழ்ச்சியில், புத்தகங்கள், தலைமைத்துவம், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் தற்கால சமூகப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.
சமூகத்தை வடிவமைக்கும் விடயங்கள் குறித்து இளைஞர்கள் தாராளமாகத் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், வெவ்வேறு கோணங்களில் பார்வைகளை ஆராயவும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
