சீனிமோதரவில் 2 சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் 10 கிலோ ‘ஐஸ்’ மீட்பு: லொறியிலும் போதைப்பொருள்!
தங்காலை: தங்காலையை அண்மித்த சீனிமோதரவில், முன்னதாக இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட, புனரமைக்கப்பட்டு வந்த வீடு ஒன்றிலிருந்து, 10 கிலோகிராமிற்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபர், தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மேலும், அந்த வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றிலிருந்து, 10 ‘ஐஸ்’ பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று காலை தங்காலையில் 200 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் மற்றொரு லொறி கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
