சிறகடிக்க ஆசை’ அப்டேட்: முத்து-மீனா மனதில் துளிர்க்கும் குழந்தை ஆசை!
சென்னை: விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை‘ சீரியலின் இன்றைய (22) எபிசோடில், முத்து மற்றும் மீனா ஆகிய இருவருக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை துளிர்விடுவதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
முத்துவிடம் அவரது நண்பர்களும், மீனாவிடம் அவரது தோழிகளும் குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு தனித்தனியாக யோசனை கூறுகின்றனர். இது, இருவரின் மனதிலும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை விதைக்கிறது.
பின்னர், அண்ணாமலையும் அவர்களிடம், “நீங்கள் குழந்தை குட்டியுடன் சந்தோஷமாக இருப்பீர்கள்,” என ஆசீர்வதிக்கிறார். எபிசோடின் இறுதியில், இருவரும் தங்களின் ஒரே மாதிரியான ஆசையை உணர்ந்துகொண்டு, விரைவில் மாடியில் ரூம் கட்டிய பிறகு, குடும்பத்தை உருவாக்கலாம் எனப் பேசி முடிவெடுக்கின்றனர். இது, இந்த சீரியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.
