அதிபர் ட்ரம்ப் வழங்கிய இராப்போசன விருந்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்பு!
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்களுக்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய விசேட இராப்போசன விருந்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
நியூயோர்க்கில் உள்ள Lotte New York Palace ஹோட்டலில் கடந்த 23ஆம் திகதி இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, அதிபர் ட்ரம்ப் மிகவும் அன்புடன் வரவேற்றார். சிநேகபூர்வ கலந்துரையாடலுக்குப் பின்னர், இரு தலைவர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
