போலி ஆவணங்கள் மூலம் வாகனப் பதிவு: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது!
கொழும்பு: முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட, 60 மில்லியன் ரூபாய் (6 கோடி) பெறுமதியான மூன்று சொகுசு வாகனங்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச் செயல் தொடர்பாக அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
