Headlines

அமெரிக்க அரசு முடங்கியது: நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால் ‘ஷட் டவுன்’ அமுல்!

வாஷிங்டன்: ஆளும் குடியரசுக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே அரசுச் செலவின மசோதா தொடர்பாக உடன்பாடு எட்டப்படாததால், அமெரிக்க அரசு இன்று (01) முதல் முடங்கியுள்ளது (shutdown). குடியரசுக் கட்சியினர் முன்வைத்த நிதி ஒதுக்கீட்டு மசோதாவிற்கு, சுகாதார மானியங்கள் தொடர்பான தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஆதரவளிக்க முடியும் என ஜனநாயகக் கட்சியினர் திட்டவட்டமாகத் தெரிவித்ததால், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. “ஜனநாயகக் கட்சியினரின் பிடிவாதத்தாலேயே இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளது,” என அதிபர் டொனால்ட் டிரம்ப் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், குடியரசுக் கட்சியினர் பேச்சுவார்த்தைக்கு மறுப்பதே இதற்குக் காரணம் என ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர். இந்த அரசு முடக்கத்தால், அத்தியாவசியப் பணியாளர்கள் தவிர, மில்லியன் கணக்கான அரச ஊழியர்கள் சம்பளமின்றி விடுப்பில் அனுப்பப்படுவார்கள். சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு, 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள முதல் அரசு முடக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *