ஏப்ரல் 17, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி, நாட்டின் சில பகுதிகளில் மழையும், சில பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதேவேளை, தீவின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், காலை வேளையில், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
