Headlines

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு!

இஸ்லாம் மதம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய மதம் தொடர்பில் அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய மற்றும் அவதூறான கருத்துக்கள் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை பிணையில் விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் நீதிமன்றத்தினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *