வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாத விகாரை பூமியில், இம்முறை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டிற்கான அரச சிரசுக்கு எண்ணெய் வைக்கும் மஹோற்சவம் மிகவும் பக்திப்பூர்வமாக இடம்பெற்றது. இந்நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த உன்னத கலாச்சார நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். புத்தாண்டு சுபநேர அட்டவணையின்படி, இன்று (15) முற்பகல் 6.55 மணிக்கு யோகமான வேளையில் தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வு ஆரம்பமானது.
தலதா மாளிகை வளாகத்தில் ஜனாதிபதி அநுர பங்கேற்புடன் சிரசுக்கு எண்ணெய் வைக்கும் அரச மஹோற்சவம்
