பிலிப்பைன்ஸின் மிண்டனாவ் பகுதியில் திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக GFZ கூறியுள்ளது. முன்னதாக, இந்த நிலநடுக்கத்தின் அளவு 7.3 ஆக இருக்கும் என்று GFZ மதிப்பிட்டிருந்தது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
