Headlines

முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி கைது: வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு!


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், நீதிமன்ற அனுமதி பெற்று இன்று (16) பிலியந்தலையில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள்: சோதனையின் போது அவரது வீட்டிலிருந்து பின்வரும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன:

  • டி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள்: 221
  • டி-56 ரக மெகசின்கள் (Magazines): 02
  • 7.62 மி.மீ தோட்டாக்கள்: 31
  • 0.22 ரக தோட்டாக்கள்: 103
  • கைக்குண்டு: 01 (செக்கோஸ்லோவாக்கியா தயாரிப்பு)

பதிவு செய்யப்பட்ட துப்பாக்கிகள்: இவற்றுடன் நான்கு பதிவு செய்யப்பட்ட துப்பாக்கிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று அவரது பெயரிலும், ஏனைய மூன்று அவரது மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு சொட்கன்கள் (Shotguns) மற்றும் இரண்டு 9 மி.மீ பிஸ்டல்கள் இதில் அடங்கும்.

விசாரணை: இவ்வளவு பெரிய அளவிலான வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *