தமிழக அரசியலில் தளபதி விஜய்யின் வருகை ஆளுங்கட்சியான திமுகவிற்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ‘மாற்றம்’ என்ற முழக்கம் வலுப்பெற்று வரும் நிலையில், எப்படியாவது தங்களுக்கு ஆதரவான ஒரு போலி பிம்பத்தை உருவாக்கிவிட வேண்டும் என ஆளுங்கட்சி தரம் தாழ்ந்த தந்திரங்களில் இறங்கியுள்ளது. அதன் உச்சக்கட்டமே, நடிகர் அஜித்குமாரின் வார்த்தைகளை அப்பட்டமாகத் திரித்து அவர்கள் அரங்கேற்றியுள்ள மலிவான அரசியல் நாடகம்.
வாக்களிக்க வந்த நடிகர் அஜித்திடம், செய்தியாளர் ஒருவர் மைக்கை நீட்டி பேட்டி கேட்க, அதற்கு அஜித் மிகவும் இயல்பாக “பேட்டி தேவையில்லை” என்ற அர்த்தத்தில் மறுத்துள்ளார். ஆனால், தளபதி விஜய்யின் அசுர வளர்ச்சியைக் கண்டு தோல்வி பயத்தில் இருக்கும் திமுகவினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான சில ஊடகங்கள், அஜித் “தமிழகத்தில் மாற்றம் தேவையில்லை” என்று கூறியதாக ஒரு பச்சைப் பொய்யைக் கட்டமைத்துப் பரப்பினர்.
இதைவிட வேடிக்கை என்னவென்றால், மக்களின் நாடித் துடிப்பை அறியாத முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த வதந்தியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “அஜித் நல்ல கருத்து சொல்லியிருக்கிறார், அவருக்கு நன்றி” என அவசர அவசரமாகப் பேட்டியளித்ததுதான். ஒரு மாநிலத்தின் முதல்வர், ஒரு நடிகர் சொல்லாத கருத்தை அவர் சொன்னதாக எடுத்துக்கொண்டு நன்றி சொல்வது அவர்கள் எந்த அளவுக்கு அரசியல் விரக்தியில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இந்த போலி பிரச்சாரத்தை அடித்து நொறுக்கினார். “அஜித் அப்படி எந்தக் கருத்தையும் கூறவில்லை, பேட்டி வேண்டாம் என்பதைத்தான் அவ்வாறு கூறினார்” என அவர் திட்டவட்டமாக விளக்கமளித்தவுடன் திமுகவின் சாயம் முழுமையாக வெளுத்தது.
தளபதி விஜய்யின் பிரம்மாண்ட அரசியல் எழுச்சியைக் கண்டு அஞ்சும் திமுக, மக்கள் உண்மையாகவே ‘மாற்றத்தை’ விரும்புகிறார்கள் என்ற யதார்த்தத்தை மறைக்க, அஜித்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி மக்களைத் திசைதிருப்ப முயன்றது இதன் மூலம் அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. “மாற்றம்” என்ற ஒற்றை வார்த்தையைக் கேட்டாலே திமுக நடுங்குவது ஏன் என்பது இப்போது தமிழக மக்களுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. இதுபோன்ற மலிவான வார்த்தை ஜாலங்கள் மற்றும் திரிபு வேலைகள் மூலம் மக்கள் விரும்பி ஏற்கும் தளபதி விஜய்யின் அரசியல் சுனாமியை இனி யாராலும் தடுத்துவிட முடியாது என்பதே தற்போதைய கள நிலவரம்!
