Headlines

இலங்கையில் சிங்களமும் தமிழ் சமூகமும் கொண்டாடும் புத்தாண்டு: பாரம்பரியத்தின் புதிய துவக்கம்

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் சமூகத்தினரால் இன்று (14) கொண்டாடப்படும் சித்திரை புத்தாண்டு இன்னும் சில மணித்தியாலங்களில் பிறக்கவுள்ளது, இது இலங்கையில் அனுசரிக்கப்படும் மிக முக்கியமான கலாச்சார கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.

‘அலுத் அவுருத’ என சிங்களத்திலும், ‘புத்தாண்டு’ என தமிழிலும் அழைக்கப்படும் இந்தப் புத்தாண்டு, இரு சமூகத்தினராலும் பல்வேறு சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மூலம் கொண்டாடப்படுகிறது.

பாரம்பரிய ஜோதிட நம்பிக்கையின் படி, சூரியன் பன்னிரண்டு ராசிகளையும் ஒரு வருடத்தில் கடக்கிறது, ஒவ்வொரு ராசியையும் கடக்க ஒரு மாதம் எடுத்துக்கொள்கிறது. மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதே புத்தாண்டு (அலுத் அவுருது) பிறப்பைக் குறிக்கிறது.

சுப நேரங்களைக் கடைப்பிடிப்பதும், பாரம்பரிய சடங்குகளைச் செய்வதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய நீண்டகால பழக்கவழக்கமாகும்.

சுப நேர அட்டவணையின்படி, புத்தாண்டு இன்று காலை 9:32 மணிக்கு பிறக்கும். புத்தாண்டிற்கு முன்னர் தொடங்கிய நோனகதய (அசுப நேரம்) இன்று மாலை 3:56 மணி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில், அனைத்து வேலைகளில் இருந்தும் விலகி மதக் கடமைகளில் ஈடுபடுவது பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. நோனகதயவின் பிற்பகுதியில், சமையல், அடுப்பு ஏற்றுதல் மற்றும் கொடுக்கல் வாங்கல் போன்ற பாரம்பரிய நடவடிக்கைகள் சுபமானதாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *