தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) இன்று (10) இலங்கையின் முக்கிய நகரங்களில் நீர்வெட்டு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மற்றும் காலி பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைப்படும்.
காலி மாநகர சபை பகுதி: வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக, காலி மாநகர சபை பகுதியில் இன்று காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
களுத்துறை மற்றும் பல பகுதிகள்: கேத்தென நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் தடைப்பட்டமை காரணமாக, களுத்துறை, வத்தேகம, மத்துகம, பேருவளை, அளுத்கம, பயாகல ஆகிய பகுதிகளில் இன்று காலை 8:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
