ஜூலை 15: ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய கடற்படை முற்றுகை மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15) கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த அரசியல் பதற்றம் காரணமாக விநியோகத் தடை ஏற்படும் என்ற அச்சம் சந்தையில் நிலவுகிறது.
அதன்படி, சர்வதேச சந்தையில் முக்கியமாக கருதப்படும் ப்ரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.19 டொலராக உயர்ந்துள்ளது. அதேபோல், டபிள்யூ.டி.ஐ (WTI) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.40 டொலராக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஜூன் மாத பாதியிலிருந்து பதிவான அதிகபட்ச விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையின் 20 சதவீதம் கொண்டு செல்லப்படும் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல், விநியோகத்தை பாதித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
