Headlines

எரிபொருள் ஒதுக்கீட்டு முறை எதிர்காலத்தில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்: அமைச்சர் அனுர கருணாதிலக

தற்போது நடைமுறையிலுள்ள QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை, எதிர்காலத்தில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் நெருக்கடியான காலப்பகுதியில் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும், குறிப்பிட்ட அளவிற்கு மட்டுப்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த அணுகுமுறை பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தை ஓரளவிற்குத் தணிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *