உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான மேலதிக பரிசீலனை மேல்முறையீட்டு நீதிமன்றில் இன்று (தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும்) நடத்தப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான் அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேலதிக சமர்ப்பிப்புகளை மேற்கொண்டார்.
சமர்ப்பிப்புகளைக் கேட்ட நீதிமன்றம், மேலதிக சமர்ப்பிப்புகளை ஜூலை 6 ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.
