வத்திக்கான், யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மோஸ்ட் ரெவ். அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களை நியமித்துள்ளது. இந்த நியமனம், கொழும்பு அதி உயர் மறைமாவட்டத்தின் உதவி ஆயராகவும், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் திருத்தூதுப் பரிபாலகராகவும் பணியாற்றி வந்த பிள்ளைநாயகம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வந்த அருட்திரு டாக்டர் ஜஸ்டின் பேர்னார்ட் ஞானப்பிரகாசம் அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்த புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தின் இராஜினாமாவை திருத்தந்தை லியோ XIV ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கைக்கான திருத்தூதுச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆயர், யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்கும் வரை, அருட்திரு டாக்டர் ஜஸ்டின் பேர்னார்ட் ஞானப்பிரகாசம் அவர்கள் திருத்தூதுப் பரிபாலகராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
