‘அமைதிக்கான நடைபயணம்’ (Walk for Peace) நிகழ்வின் இறுதி நாளான இன்று (28), கொழும்பு நகரை மையப்படுத்தி விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த நடைபயணத்தின் நிறைவு விழா இன்று மாலை 4:00 மணிக்கு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, கொழும்பு போக்குவரத்துப் பிரிவினர் சுதந்திர சதுக்கம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, பின்வரும் வீதிகள் மற்றும் பகுதிகள் இந்த போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன:
- பேஸ்லைன் வீதி (பேஸ்லைன் வீதி பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திலிருந்து பொரள்ளை சந்தி வரை)
- மருதானை வீதி
- நந்ததாச கோடாகொட மாவத்தை
- வார்ட் பிளேஸ் (Ward Place)
- லிப்டன் சுற்றுவட்டம் (Lipton Circus)
- தர்மபால மாவத்தை
- எஃப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை
- சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை
- ஹோர்டன் பிளேஸ் (Horton Place)
- நந்தா மோட்டார்ஸ் பகுதி
- சுதந்திரத் அவென்யூ (Independence Avenue)
- பிரேமசிறி கேமதாச மாவத்தை
- கேம்பிரிட்ஜ் பிளேஸ் (Cambridge Place)
- க்ளாஸ் ஹவுஸ் (Glass House) பகுதி
- மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை
- நூலகச் சந்தி
- ஃப்ளவர் வீதி (Flower Road)
- பித்தல சந்தி
- ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை
- முத்தியா வீதி
- பௌத்தாலோக்க மாவத்தை
- ஸ்டேபிள் வீதி (Staple Street)
- கங்காராம விகாரையைச் சூழவுள்ள அனைத்து வீதிகள்.
எனவே, இந்தப் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, வாகனச் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
