Headlines

செப்டம்பர் முதல் கொழும்பில் புதிய ‘மெட்ரோ’ பஸ் சேவை; போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை!

கொழும்பு நகருக்குள் நுழையும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, திறமையான பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்கும் நோக்கில், தெரிவு செய்யப்பட்ட வழித்தடங்களை உள்ளடக்கிய புதிய ‘மெட்ரோ’ (Metro) பஸ் சேவை வரும் செப்டம்பர் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது.

பயணிகளுக்கு வசதியான மற்றும் இலகுவில் அணுகக்கூடிய போக்குவரத்து விருப்பத்தை வழங்குவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், புதிய வழித்தடங்கள் ‘CM’ குறியீடு மற்றும் தனித்துவமான நிறச் சின்னங்களைப் பயன்படுத்தி பெயரிடப்பட்டுள்ளன.

இதன்படி முன்மொழியப்பட்டுள்ள மெட்ரோ பஸ் வழித்தடங்கள் பின்வருமாறு:

  • CM 01 (நீல வழித்தடம்): மாக்கும்புரவிலிருந்து பன்னிபிட்டிய, ராஜகிரிய மற்றும் பொரள்ளை ஊடாக புறக்கோட்டை வரை.
  • CM 02 (மஞ்சள் வழித்தடம்): மில்லினியம் சிட்டியிலிருந்து அத்துருகிரிய, மாலபே மற்றும் பொரள்ளை ஊடாக புறக்கோட்டை வரை.
  • CM 03 (இண்டிகோ வழித்தடம்): கடவத்தையிலிருந்து மாக்கும்புர வரை.
  • CM 04 (ஆரஞ்சு வழித்தடம்): தெமட்டகொடவிலிருந்து பாணந்துறை வரை.
  • CM 05 (ஊதா வழித்தடம்): பத்தரமுல்லையிலிருந்து ஏகல வரை.
  • CM 06 (இளம்பச்சை வழித்தடம்): கொள்ளுப்பிட்டி வட்டச் சேவை (Circular Route).
  • CM 08 (கருப்பச்சை வழித்தடம்): கெஸ்பேவவிலிருந்து புறக்கோட்டை வரை.

பேருந்துகளையும் ஓட்டுநர்களையும் இணைக்க புதிய டிஜிட்டல் அமைப்பும் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது பேருந்துகள் அட்டவணைப்படுத்தப்பட்ட நேரங்களின்படி இயங்குவதற்கும், பொதுப் போக்குவரத்து வலையமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *