Headlines

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கைது

முன்னாள் அமைச்சரும் ‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படுபவருமான பிரேமலால் ஜயசேகரவை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது, தனிநபர்களை அச்சுறுத்தியமை மற்றும் துப்பாக்கியைக் காட்டி குற்றவியல் மிரட்டல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் அனுமதிப்பத்திரம் ஏற்கனவே காலாவதியாகியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *