கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேசிய திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா நேற்று (12) ஆரம்பமாகி இன்று (13) பிரதான உற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு, உருவப்பவனி (Suruvama Perahera) இன்று (13) பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதிகளில் நடைபெறும் என்று இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய, இந்த மத நிகழ்வை இலகுபடுத்தவும், பக்தர்கள் மற்றும் வாகன சாரதிகளின் சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும் இன்று அப்பகுதியில் சிறப்பு போக்குவரத்து முகாமைத்துவத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உருவப்பவனி செல்லும் பாதை (மாலை 4.00 மணி முதல்):
புனித அந்தோனியாரின் திருவுருவம் தாங்கிய பவனி இன்று மாலை 4.00 மணிக்கு கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து ஆரம்பமாகி பின்வரும் வீதிகள் ஊடாகச் செல்லும்:
- கொட்டாஞ்சேனை வீதி
- கல்பொத்த வட்டரவு
- ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை
- ஹெட்டியாவத்தை சந்தி
- ஸ்ரீ இராமநாதன் மாவத்தை
- புனித அந்தோனியார் மாவத்தை
இந்த பவனி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேசிய திருத்தலத்தை வந்தடையும், அங்கு மாலை 5.00 மணிக்கு திருப்பலி (Divine Liturgy) ஒப்புக்கொடுக்கப்படும்.
உருவப்பவனி மீண்டும் ஆரம்பம் (மாலை 5.30 மணி முதல்):
திருப்பலியைத் தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியார் தேவாலயத்தின் அருகிலிருந்து பவனி மீண்டும் ஆரம்பமாகி பின்வரும் வீதிகள் ஊடாகச் செல்லும்:
- புனித அந்தோனியார் வீதி
- சிந்துப்பிட்டி வட்டரவு
- சிந்துப்பிட்டி வீதி
- கதிரேசன் வீதி
- ஆண்டிவெல்ல வீதி
- பிராஸ் பவுண்டரி (Brass Foundry) வீதி
- சிந்துப்பிட்டி வீதி
- ஹின்னி அப்புஹாமி வீதி
- அலுத் செட்டி வீதி
- ஜம்பட்டா வீதி
பின்னர், பவனி மீண்டும் தேவாலய வளாகத்தை வந்தடையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள்
பவனியை முன்னிட்டு, இன்று பிற்பகல் 2.30 மணி முதல் பின்வரும் வீதிகளுக்கான வாகனப் பிரவேசம் மட்டுப்படுத்தப்படலாம்:
- ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து புனித அந்தோனியார் தேவாலயம் நோக்கி
- சிந்துப்பிட்டி வட்டரவிலிருந்து புனித அந்தோனியார் தேவாலயம் நோக்கி
- சைனா வீதி சந்தியிலிருந்து Reclamation வீதி ஊடாக சிந்துப்பிட்டி நோக்கி
- செட்டி வீதியிலிருந்து ஆண்டிவெல்ல வீதி நோக்கி
- ஆடுருப்பு வீதியிலிருந்து ஆண்டிவெல்ல வீதி நோக்கி
- ஆடுருப்பு வீதியிலிருந்து விவேகானந்தா மலை நோக்கி
- மகா வித்தியாலய மாவத்தை மணிக்கூட்டுக் கோபுர வட்டரவிலிருந்து விவேகானந்தா மலை நோக்கி
- மகா வித்தியாலய மாவத்தையிலிருந்து அலுத் செட்டி வீதி நோக்கி
- மகா வித்தியாலய மாவத்தையிலிருந்து சங்கமித்த மாவத்தை நோக்கி
- ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தையிலிருந்து கிரீன் லேன் (Green Lane) நோக்கி
- ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தையிலிருந்து ஜம்பட்டா வீதி நோக்கி
- சங்கமித்த மாவத்தையிலிருந்து ஜம்பட்டா வீதி நோக்கி
- ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தையிலிருந்து கல்பொத்த நோக்கி
- ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தையிலிருந்து போதிராஜ மாவத்தை நோக்கி
- ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தையிலிருந்து சிவானந்தா வீதி நோக்கி
- ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தையிலிருந்து ஜம்பட்டா மாவத்தை நோக்கி
மாற்று வழிகள்
மோதரையிலிருந்து புறக்கோட்டை (Pettah) நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு: ஹெட்டியாவத்தை சந்தியில் இடதுபுறமாகத் திரும்பி ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை ஊடாக ஆமர் பார் (Armar Barber) சந்தியைச் சென்றடையலாம்.
புறக்கோட்டையிலிருந்து மோதரை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு: சைனா வீதி, பிரதான வீதி, காஸ்பா சந்தி, ஆடுருப்பு வீதி (ஸ்ரீ ரத்னஜோதி சரவணமுத்து மாவத்தை), மகா வித்தியாலய மாவத்தை, மணிக்கூட்டுக் கோபுர வட்டரவு, மகா வித்தியாலய மாவத்தை மற்றும் ஆமர் பார் சந்தி ஊடாகச் செல்லலாம்.
வாகன நிறுத்துமிடங்கள்
பக்தர்கள் மற்றும் வாகனச் சாரதிகளுக்காக பின்வரும் வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன:
- சிந்துப்பிட்டி தேவாலய வாகன நிறுத்துமிடம்
- தங்கச் சந்தை (Gold Market) வாகன நிறுத்துமிடம்
- Reclamation வீதி வாகன நிறுத்துமிடம்
- ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை வாகன நிறுத்துமிடம்
- புளூமெண்டல் (Bloemendhal) வீதி வாகன நிறுத்துமிடம்
- அலுத் மாவத்தை வாகன நிறுத்துமிடம் (ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாகே வத்தை சந்தி வரை)
எனவே, இன்று மேற்குறிப்பிட்ட பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மற்றும் பொதுமக்கள், இந்த சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு இணங்கி, மத விழா சீராக நடைபெறுவதை உறுதி செய்ய கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
