Headlines

தமிழக தேர்தல் ‘சுனாமி’: வரலாற்றுச் சாதனை 85.15% வாக்குப்பதிவு – அதிரடிப் புள்ளிவிவரங்கள்!

சென்னை (தமிழ்முரசு NEWS): தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், ஜனநாயகத் திருவிழாவின் உச்சக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவின் இறுதி நிலவரப்படி, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

இந்த விகிதம், கடந்த 2021 சட்டசபை தேர்தலின் 72.81% பதிவை விட சுமார் 12 சதவீதம் அதிகமாகும், இது முன்னெப்போதும் இல்லாத ஒரு அதிரடி ஏற்றம். இந்த முறை வாக்குப்பதிவு அனல் பறக்கும் கொங்கு மண்டலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக அதிகமாகக் காணப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவின் ‘சாம்ப்யன்கள்’: சேலம் வீரபாண்டி & கரூர்!

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குப்பதிவு எங்கே தெரியுமா? சேலம் மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான வீரபாண்டி மற்றும் அரசியல் போர்க்களமான கரூர் ஆகிய இரு தொகுதிகளும் தலா 93.40% வாக்குகளைப் பதிவு செய்து தமிழ்நாட்டிலேயே முதலிடத்தை கெத்தாகப் பகிர்ந்து கொண்டுள்ளன.

அனல் பறந்த கரூர் அரசியல் களம்:

கரூர், தமிழகத்தின் அரசியல் போர்க்களமாக எப்போதும் திகழும் என்பதால், இந்த முறை வாக்குப்பதிவிலும் தன் ‘மாஸ்’ காட்டி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கு தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 79 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கரூர் தொகுதியில் திமுகவின் ஆசி. எம். தியாகராஜன், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தவெகவின் மதியழகன், நாதகவின் கருப்பையா என முன்னணிப் படைகள் களம் கண்டன. தொகுதியில் நிலவும் அனல் பறக்கும் அரசியல் போட்டி மற்றும் வாக்காளர்களுக்கு இடையே நிலவும் கட்சிப் பற்று, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதத்தை உயர்த்துகிறது. அந்தவகையில் இந்த முறை கரூரில் 93.40% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

வீரபாண்டியில் விறுவிறுப்புப் போட்டி:

கரூருடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்ட வீரபாண்டி தொகுதியில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தைச் சேர்ந்த தருண், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மனோன்மணியின் மகன் பாலாஜி சுகுமார், தவெக சார்பில் பழனிவேல், நாதக சார்பில் ராஜேஷ்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

குறைந்த வாக்குப்பதிவு & தலைநகரின் சாதனை:

  • குறைந்தபட்சம்: தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக பாளையங்கோட்டை சட்டசபை தொகுதியில் 68.97% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
  • தலைநகர் சென்னை: தலைநகர் சென்னையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 83.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன, இது ஒரு முக்கிய மாற்றத்தைக் காட்டுகிறது.

மாவட்ட வாரியாக டாப் & பாட்டம்:

  • மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் அதிகபட்சமாக கரூரில் 92.63 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

(மாவட்ட வாரியாக முழுமையான வாக்குப்பதிவு புள்ளிவிவரங்கள் மேலே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *